Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/தர்மம் நம்மைக் காக்கும்

தர்மம் நம்மைக் காக்கும்

தர்மம் நம்மைக் காக்கும்

தர்மம் நம்மைக் காக்கும்

ADDED : ஏப் 30, 2010 09:47 AM


Google News
Latest Tamil News
* தியாகம் என்பது வேறு. வெறுப்பது என்பது வேறு. முழு மதிப்பையும் உணர்ந்து, அது கிடைத்தும் எனக்கு வேண்டாம் என்ற சொல்வது தியாகம். கிடைக்காத ஒன்றை நினைத்து வேதனைப்படுவது வெறுப்பு.

* சத்தியம் என்றும், தர்மம் என்றும் உயர்வான இரு பண்புகளை மக்களிடம் பரப்புவதற்காகவே ராமாயணம் மகாபாரதம் என்னும் இரு இதிகாசங்கள் நம் மண்ணில் எழுந்தன. இந்த இரு வரலாற்றையும் படிப்பதன் மூலம் எல்லா நன்மைகளும் நம்மை வந்து சேரும்.

* உலக வாழ்க்கைக்கு பொருள் மிக தேவையானது. ஆனால், அதன் மீது அளவுக்கதிமான பற்று கூடாது என்கின்றன சாஸ்திரங்கள்.

* 'என்னால் எல்லாம் முடியும்' என்று ஆணவத்தோடு எண்ணும் வரை கடவுளின் அருள் நமக்குக் கிடைப்பதில்லை. 'எல்லாம் நீயே! என்னிடம் எதுவும் இல்லை' என்று சரணாகதி அடையும்போது கடவுள் அந்த கணமே நம்மைத் தேடி ஓடி வருவார்.

* தமிழில் அருள் என்ற சொல்லுக்கு இணையான சொல் சமஸ்கிருதத்தில் தர்மம் என்பதாகும். வேறு எந்த மொழியிலும் இது போன்ற சொற்கள் இல்லை. தர்மத்தை நாம் காப்பாற்றினால் அது நம்மைக் காப்பாற்றும்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us